உள்ளூர் செய்திகள்

பேரணியில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

குஜிலியம்பாறையில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

Published On 2022-08-10 04:34 GMT   |   Update On 2022-08-10 04:34 GMT
  • குஜிலியம்பாறையில் போலீசார் சார்பில் போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
  • கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

குஜிலியம்பாறை:

குஜிலியம்பாறையில் போலீசார் சார்பில் போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கல்லூரி மாணவர்கள் போதைபொருட்களை பயன்படுத்தி வாழ்க்கையை சீரழித்து கொள்ள கூடாது என அறிவுறுத்தினர்.

மேலும் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பேரணி குஜிலியம்பாறை பஸ்நிலையம், கடைவீதி வழியாக போலீஸ் நிலையத்தை வந்தடைந்தது.

இதில் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் சந்திரன், வேடசந்தூர் டி.எஸ்.பி துர்க்காதேவி, இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா, பாளையம் நகர செயலாளர் கதிரவன், பேரூராட்சி சேர்மன் பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர் சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News