உள்ளூர் செய்திகள்

முகாமில் டி.எஸ்.பி. பெனாசிர் பாத்திமா பேசினார்.

திண்டுக்கல்லில் பள்ளி மாணவர்களுக்கு போதை தடுப்பு விழிப்புணர்வு

Published On 2023-11-18 13:51 IST   |   Update On 2023-11-18 13:51:00 IST
  • மாணவர்களுக்கு நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
  • டி.எஸ்.பி போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி பேசினார்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அங்குவிலாஸ் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

இதில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீஸ் டி.எஸ்.பி. பெனாசிர் பாத்திமா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் பற்றியும், இதனால் ஏற்படும் வாழ்க்கைத் தரம் பாதிப்பு குறித்தும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி பேசினார்.

இதையடுத்து மாணவர்கள் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணையா, திட்ட அலுவலர் கிருஷ்ணகுமார், உதவி திட்ட அலுவலர் இளையராஜா மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News