உள்ளூர் செய்திகள்

சுந்தராபுரம் அருகே கள்ளக்காதலியுடன் தகராறு-டிரைவர் தற்கொலை

Published On 2023-08-14 09:39 GMT   |   Update On 2023-08-14 09:39 GMT
  • முத்துக்குமார் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
  • சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குனியமுத்தூர்,

கோவை சுந்தராபுரம் அருகே உள்ள பிள்ளை யார்புரத்தை சேர்ந்தவர் முத்துகுமார் (வயது 29). டிரைவர். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த திருமணமாக இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இளம்பெண் வாலிபருடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்து வந்தார்.

இதன் காரணமாக முத்துக்குமார் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் வாழக்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் அவர்கள் இது குறித்து சுந்தராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட முத்துக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News