உள்ளூர் செய்திகள்

டவுன் தெற்கு மவுண்ட் ரோட்டில் தூர்வாரும் பணி நடந்த போது எடுத்த படம்.

டவுன் மவுண்ட் ரோட்டில் சாக்கடை வாறுகால் தூர்வாரும் பணி

Published On 2023-07-29 14:51 IST   |   Update On 2023-07-29 14:51:00 IST
  • டவுன் தெற்கு மவுண்ட் ரோட்டில் சாக்கடை வாறுகால்கள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது.
  • சிவா தெருவில் சிறிய அளவிலான பொக்லைன் உதவியுடன் அடைப்புகள் சரி செய்யப்பட்டது.

நெல்லை:

நெல்லை மாநகராட்சி 22-வது வார்டுக்குட்பட்ட தெற்கு மவுண்ட் ரோட்டில் சாக்கடை வாறுகால்கள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது.

பொது மக்கள் புகார்

தற்போது முறையாக பராமரிப்பு இல்லாத காரணத்தினாலும், ஆக்கிரமிப்பினாலும், மழைக்காலங்களில் அந்த பகுதியில் சாக்கடை நீர் செல்வதற்கு வழி இல்லாமல் அடைப்பு ஏற்பட்டு கால்வாய்களில் இருந்து சாக்கடை நீர் வெளியேறி குடியிருப்புகள் புகுவதாக புகார்கள் வந்தது.

இதையடுத்து இன்று கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் வெங்கட் ராமன் அறிவுறுத்தலின் பேரிலும் டவுன் மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் தெற்கு மவுண்ட் ரோடு இருபுறமும் சாக்கடை வாறுகாலில் தூர் வாரும் பணி நடைபெற்றது.

தூர்வாரும் பணி

இந்த தூர்வாரும் பணியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வாறுகால்களை முழுவதுமாக தூர் வாரி சீரமைத்தனர்.

தொடர்ந்து டவுன் சிவா தெருவில் சிறிய அளவிலான பொக்லைன் உதவியுடன் அடைப்புகள் சரி செய்யப்பட்டது. குவிந்து கிடந்த மணல், கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டது.

Tags:    

Similar News