உள்ளூர் செய்திகள்

நெல்லை மாநகர பகுதிகளில் கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க வீடு வீடாக ஆய்வு

Published On 2023-09-08 09:01 GMT   |   Update On 2023-09-08 09:01 GMT
  • கொசுப்புழுக்கள் உருவாகும் வாய்ப்புள்ள பிளாஸ்டிக் உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும்.
  • புதிய கட்டிடங்களை ஆய்வு செய்து தண்ணீர் தேங்காத வகையில் பராமரித்து கொள்ள அறிவுரை வழங்கப்பட்டது.

நெல்லை:

நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி உத்தரவின்படி துணை ஆணையாளர் தாணுமூர்த்தி மற்றும் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனையின் படி மேலப்பாளையம் மண்டல உதவி ஆணை யாளர் (பொறுப்பு) காளி முத்து அறிவுறுத்தலின்படி கொசு ஒழிப்பு பணியினை தீவிரப்படுத்தி உள்ளனர்.

மேலாண்மை

நெல்லையில் பரவலாக சாரல்மழை பெய்து வருவதால் மேலப்பாளையம் மண்டலத்தில் சுகாதார அலுவலர் அரசகுமார், சுகாதார ஆய்வாளர் நட ராஜன் மற்றும் கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் மூலமாக வீடு வீடாக கள பணியாளர்கள் ஆய்வு செய்து சுற்றுப்புறங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தண்ணீர் தேங்கி கொசுப்புழுக்கள் உருவாகும் வாய்ப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள், சிரட்டைகள், டயர்கள், உடைந்த குடங்கள் உள்ளிட்ட தேவையற்ற பொ ருட்களை அகற்ற வேண்டும் என வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு அறிவுறுத்தி அதனை அகற்றினர்.

பூந்தொட்டிகள், மொட்டை மாடிகளில் தண்ணீர் தேங்காத வகையில் தினசரி சுத்தம் செய்ய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்கள்.

மேலும் புதிய கட்டிடங்களை ஆய்வு செய்து தண்ணீர் தேங்காத வகையில் பராமரித்து கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டது.

மேலும் மேலப்பாளையம் பகுதியில் கொசு ஒழிப்பு புகைமருந்து அடிக்கப்பட்டது. 

Tags:    

Similar News