உள்ளூர் செய்திகள்

தி.மு.க. இளைஞரணி உறுப்பினர் சேர்க்கையை காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்.

இல்லம் தேடி இளைஞரணி தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்

Published On 2023-10-05 08:18 GMT   |   Update On 2023-10-05 08:18 GMT
  • இல்லம் தேடி இளைஞரணி தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாமை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
  • இளைஞரணி யூசுப் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே உள்ள சாத்தான்குளம் ஊராட்சி யில் மண்டபம் மேற்கு ஒன்றிய தி.மு.க. மற்றும் மாவட்ட இளைஞரணி இளைஞரணி சார்பில் இல்லம் தேடி இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படியும், மாநில இளைஞ ரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவு றுத்தலின் படியும், மாநில இளை ஞரணி துணை செயலாளர் இன்பா ரகு ஆலோசனையின் பேரில் மண்டபம் மேற்கு ஒன்றிய தி.மு.க மற்றும் மாவட்ட இளைஞரணி சார்பில் மேற்கு ஒன்றிய பொறுப்பா ளர் கே.ஜே.பிரவீன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சம்பத் ராஜா ஆகியோர் ஏற்பாட்டில் இல்லம் தேடி இளைஞரணி சேர்க்கை முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.

மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கோபிநாத், கவுன்சிலர் ரமேஷ் கண்ணன்,தௌபீக் ரஹ்மான், கீழக்கரை நகர் இளைஞரணி அமைப்பா ளரும், நகரசபை துணை தலைவருமான வழக்கறிஞர் ஹமீது சுல்தான், துணை அமைப்பாளர்கள் கவுன்சிலர் பயாஸ், நயீம், சாத்தான்குளம் தொழிலதிபர் ரம்லி, இளைஞரணி யூசுப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News