உள்ளூர் செய்திகள்

கோவையில் தீபாவளி பட்டாசு வெடிப்பதில் தகராறு-2 பேர் கைது

Published On 2023-11-14 14:32 IST   |   Update On 2023-11-14 14:32:00 IST
  • கோவர்தன் கீழே கிடந்த கல்லை எடுத்து செல்வகுமாரை தாக்கியுள்ளார்.
  • உடனடியாக துடியலூர் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.

 கோவை.

கோவை துடியலூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (38), இவர் தனது குழந்தைகளுடன் வீட்டிற்கு முன்பு பட்டாசு வெடித்து கொண்டிருந்தார்.

குழந்தைகள் பட்டாசு வைப்பதை பார்த்து கொண்டிருக்கும் போது திடீரென குடிபோதையில் இரு சக்கர வாகனத்தில் வந்த அதே பகுதியை சேர்ந்த கோவர்தன் மற்றும் மதி என இருவரும் குழந்தைகள் பட்டாசு வைத்த இடத்தில் வண்டியை நிறுத்தினார்கள்.

இதனால் செல்வகுமார் இரண்டு பேரிடமும் கேள்வி கேட்டபோது தகராறு ஏற்பட்டது. இதில் கோவர்தன் கீழே கிடந்த கல்லை எடுத்து செல்வகுமாரை தாக்கியுள்ளார். மேலும் வீட்டிற்கு முன்புறம் உள்ள கூரையை உடைத்தனர்.

மதியின் நண்பர்கள் நந்தகுமார் லோகேஷ் என இருவரும் சம்பவ இடத்திற்கு வந்து செல்வகுமாரிடம தகராறில் ஈடுபட்டனர், அப்போது தடுக்கவந்த தவமணி என்ற பெண்ணின் ஆடையை கிழித்தனர்.

இது குறித்து உடனடியாக துடியலூர் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்க்கு வந்து நந்தகுமார், லோகேஷ் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தப்பிச் சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News