உள்ளூர் செய்திகள்

முக்கூடல் பாலகன் சரஸ்வதி கல்லூரியில் பேரிடர் மீட்புப் பயிற்சி

Published On 2023-09-23 08:54 GMT   |   Update On 2023-09-23 08:54 GMT
  • பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
  • நிகழ்ச்சியின் போது பல்வேறு உயிர்காப்பு நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

முக்கூடல்:

முக்கூடல் பாலகன் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி யில் தேசிய பேரிடர் மீட்புப்படை சார்பில் பேரிடர் மீட்புப் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி நிறுவனர் பாலகன் ஆறுமுகச்சாமி, கல்லூரி முதல்வர் கிருஷ்ணவேணி ஆகியோர் தலைமை தாங்கினர். சேரன்மகாதேவி தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் அரக்கோ ணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப்படை சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சய் தேஸ்வால் தலைமையிலான 16 வீரர்கள் கலந்து கொண்டு மழை, வெள்ளம், இயற்கை சீற்றங்கள், பேரிடர், பூகம்பம், சுனாமி காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மீட்புப் பணிகள் குறித்து மாணவிகளுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும், நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டால் முன்னெ ச்சரிக்கை நடவடிக்கைகளை எப்படி மேற்கொள்வது, வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்பது, தக்க வைப்பது, மாரடைப்பு ஏற்படும் போது உடனடியாக உயிர் காப்பது எப்படி?, விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்புவது, ஆம்புலன்சை வரவழைப்பது உள்ளிட்ட பல்வேறு உயிர்காப்பு நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளித்தனர்.

இதில் கல்லூரி மாணவிகள், பேராசிரி யர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News