உள்ளூர் செய்திகள்
பணம் வைத்து சூதாடிய தருமபுரி வாலிபர் உள்பட 3 பேர் கைது
- ஓசூர் டவுன் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- அதியமான் கோட்டையை சேர்ந்த நவீன்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் பணம் வைத்து சூதாடிய தேர்பேட்டையை சேர்ந்த சந்திரன், பாபு, தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டையை சேர்ந்த நவீன்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.