உள்ளூர் செய்திகள்

ஓசூரில் சி.பி.எம்.கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

Published On 2022-07-30 09:47 GMT   |   Update On 2022-07-30 09:47 GMT
  • மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம், நடைபெற்றது.
  • மாநகர செயலாளர்ஜெயராமன் தலைமை தாங்கினார்.

ஓசூர்,

மத்திய பா.ஜ.க. அரசின், ஏழை மக்களின் மீதான பொருளாதார சுமைகளை கண்டித்தும், அரிசி,கோதுமை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் மீதான 5 சதவீத வரிவிதிப்பை வாபஸ் பெறக்கோரியும் சி.பி.எம் கட்சி சார்பில், மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம், நடைபெற்றது.

ஓசூர் மாநகர, ஒன்றிய கமிட்டி சார்பில், ஓசூரில் எம்.ஜி .ரோடு காந்தி சிலையருகே நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு மாநகர செயலாளர்ஜெயராமன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ராஜா ரெட்டி முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோவிந்தசாமி கண்டன உரையாற்றினார்.

Tags:    

Similar News