- மர்ம நபர்களால் கார் மீது வெடி குண்டு வீசி, வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
- கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி,
காஞ்சீபுரம் மாவட்டம், பூந்தமல்லி அடுத்த வளர்புரம் ஊராட்சி மன்றத் தலைவர் சங்கர். பா.ஜனதா கட்சியின் பட்டியல் அணியின் மாநில பொருளாளராக இருந்தார். இவர் கடந்த 27-ந் தேதி இரவு, பூந்தமல்லி பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், நசரத்பேட்டை சிக்னல் அருகே காரில் வந்து கொண்டிருந்த போது மர்ம நபர்களால் கார் மீது வெடி குண்டு வீசி, வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதைக் கண்டித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பா.ஜ., பட்டியல் அணி சார்பில் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதற்கு எஸ்.சி.,பிரிவு மாவட்டத் தலைவர் ரவி தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் சிவபிரகாசம் முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர்கள் மீசை அர்ச்சுணன், கோவிந்தராஜ், மாவட்ட துணைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர்கள் மன்னன் சிவா, முருகேசன், எஸ்.சி., அணி மாவட்ட பார்வையாளர் திருமலை பெருமாள், பொதுச் செயலாளர் திருமுகம், உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், பா.ஜ., பட்டியல் அணி மாநில பொருளாளர் சங்கர் படுகொலை செய்யப்பட்டவை கண்டித்தும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கத் தவறியதாக தி.மு.க., அரசைக் கண்டித்தும், கொலை, கொள்ளை பெருகிவிட்டதாகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.