உள்ளூர் செய்திகள்

அரசு இடத்தில் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த கோரிக்கை- அரசியல் கட்சியினர் திரண்டதால் பரபரப்பு

Published On 2023-10-08 07:55 GMT   |   Update On 2023-10-08 07:55 GMT
  • பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டுமான பணி நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
  • அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அப்பகுதிக்கு சென்று கட்சி கொடிகளை நட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்போரூர்:

திருப்போரூர் ரவுண்டனா அருகில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டுமான பணி நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இந்நிலையில் இன்று காலை அரசு இடத்தில் கட்டுமான பணிகளை நிறுத்தக்கோரி அ.தி.மு.க, பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் இன்று காலை அப்பகுதிக்கு சென்று கட்சி கொடிகளை நட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் திருப்போரூர் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். இது குறித்து வருவாய் துறைக்கு தகவல் தெரிவித்து அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News