உள்ளூர் செய்திகள்

பொள்ளாச்சி அருகே இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்

Published On 2023-06-28 14:49 IST   |   Update On 2023-06-28 14:49:00 IST
  • ஆட்டோ டிரைவர் பிரகாஷ் என்பவர் குடிபோதையில் பெண்களை தகாத வார்த்தைகளால் பேசியபடி சென்றார்.
  • தனலட்சுமி பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தார்.

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் ரோடு பெரியார் காலனியை சேர்ந்தவர் சசி. இவரது மனைவி தனலட்சுமி (வயது 37). கூலித் தொழிலாளி.

சம்பவத்தன்று இவரது வீட்டின் அருகே வசிக்கும் ஆட்டோ டிரைவர் பிரகாஷ் (37) என்பவர் குடிபோதையில் அந்த பகுதியில் உள்ள பெண்களை தகாத வார்த்தைகளால் பேசியபடி சென்றார்.

இதனை பார்த்த தனலட்சுமி ஏன் இவ்வாறு பேசி செல்கிறீர்கள் என கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த பிரகாஷ் அவரையும் தகாத வார்த்தைகளால் பேசி விட்டு சென்றார். பின்னர் அவர் அந்த வழியாக வேலை முடிந்து நடந்து வந்த தனலட்சுமியின் கணவர் சசியை வழிமறித்து உனது மனைவியை ஒழுங்காக வைத்து கொள். இல்லை என்றால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி அவரையும் தாக்கி விட்டு சென்றார்.

இது குறித்து தனலட்சுமி பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குடி போதையில் பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசி அவரது கணவரை தாக்கிய ஆட்டோ டிரைவர் பிரகாஷை கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News