சேதப்படுத்தப்பட்ட விநாயகர் சிலையையும், புதிதாக செய்யப்பட்ட விநாயகர் சிலையையும் படத்தில் காணலாம்.
இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
மேலப்பாளையத்தில் நள்ளிரவில் விநாயகர் சிலை சேதம்-இந்து அமைப்பினர் போராட்டம்
- நெல்லை மேலப்பாளையம் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள கோவில் வளாகத்தில் விநாயகர் சிலை உள்ளது.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
நெல்லை:
நெல்லை மேலப்பாளையம் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள கோவில் வளாகத்தில் விநாயகர் சிலை உள்ளது.
இன்று காலை அங்கு வழிபட சென்றவர்கள் விநாயகர் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளதை பார்த்து நிர்வாகி தங்கவேல் என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் இதுகுறித்து மேலப்பாளையம் போலீசருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தினமும் பூஜை நடைபெறும் நிலையில் விநாயகர் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளதால் நள்ளிரவு அங்கு யாரேனும் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகித்தனர்.
இதைத் தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதால் துணை கமிஷனர் சீனிவாசன் உத்தரவின் பேரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து அறிந்த இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகள் அங்கு கோவிலில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் .சிலையை சேதப்படுத்தி யவர்களை கைது செய்ய வேண்டும், புதிய விநாயகர் சிலை அமைத்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அவர்களுடன் துணை கமிஷனர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மேலும் பாளையங்கோட்டை தாசில்தார் அவுடையப்பன் புதிய விநாயகர் சிலை அமைத்து கொடுக்க ஏற்பாடு செய்தார். இதைதொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.