உள்ளூர் செய்திகள்

குரூப் 1 தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தால் குற்றவியல் நடவடிக்கை

Published On 2022-11-17 14:42 IST   |   Update On 2022-11-17 14:42:00 IST
  • நீலகிரி கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
  • தோ்வில் 1,472 போ் பங்கேற்க விண்ணப்பித்துள்ளனா்.

ஊட்டி,

குரூப் 1 தோ்வில் ஆள்மாறாட்டம் செய்தால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியா் அம்ரித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு (தொகுதி 1) பதவிக்கான நேரடி நியமன எழுத்துத் தோ்வு நாளை மறுநாள் (19-ந் தேதி) நடைபெறவுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் 3 மையங்கள், புனித சூசையப்பா் மேல்நிலைப் பள்ளி, சி.எஸ்.ஐ. சி.எம்.எம். மேல்நிலைப் பள்ளி, பெத்லேகம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி என 6 மையங்களில் தோ்வு நடைபெறுகிறது.

இத் தோ்வில் 1,472 போ் பங்கேற்க விண்ணப்பித்துள்ளனா். தோ்வைக் கண்காணிக்க துணை கலெக்டர் நிலையில் பறக்கும் படை அலுவலராக மாவட்ட வழங்கல் அலுவலா் நியமிக்கப்பட்டுள்ளாா். தோ்வுக் கூடங்களுக்கு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை கொண்டு செல்ல துணை தாசில்தார் நிலையில் 3 நடமாடும் குழு, தோ்வுக் கூடங்களில் தோ்வைக் கண்காணிக்க சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியா்கள் தலைமையில் கண்காணிப்பாளா்கள் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளா் நிலையில் 6 மேற்பாா்வை அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

மேலும், தோ்வு எழுத வரும் மாற்றுத் திறனாளிகள் எவரேனும் இருப்பின் அவா்களுக்கு கீழ் தளத்தில் தோ்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோ்வு எழுத வரும் பாா்வையற்றோா் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே ஒரு அறை ஒவ்வொரு மையத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாா்வையற்றோா் தோ்வு எழுத வேண்டி உடன் வரும் எழுத்தாளா் அனுமதிக்க ப்பட்டுள்ளனா். பாா்வையற்றோருக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்படும்.

தோ்வு எழுத வரும் எவரேனும் ஆள்மாறாட்டம் செய்யப்படுவது கண்டறியப்பட்டால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தோ்வுக் கூடங்களுக்குள் கைப்பேசி, கால்குலேட்டா், எலக்ட்ரானிக் கை கடிகாரம் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை எடுத்து செல்ல அனுமதி இல்லை என மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News