காரமடை அருகே தாத்தாவை கல்லால் தாக்கிய மாநகராட்சி ஊழியர் கைது
- குடிபோதையில் ஜீவானந்தம் திருமாயனை கல்லால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
- இது குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கோவை,
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள பாரதி நகரை சேர்ந்தவர் திருமாயன் (வயது67). கூலித் தொழிலாளி.
இவரது பேத்தியை கவுண்டன்பாளையத்தை சேர்ந்த மாநகராட்சி ஊழியர் ஜீவானந்தம் (25) என்பவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர். தற்போது ஒரு மகன் உள்ளார்.
கடந்த 1 ½ வருடங்களுக்கு முன்பு கணவன்- மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே இளம்பெண் தனது கணவரை பிரிந்து தாத்தா திருமாயன் வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று குடிபோதையில் ஜீவானந்தம் அங்கு சென்றார். அவர் தனது மனைவியை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த ஜீவானந்தம், திருமாயனை கல்லால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய திருமாயனை அவரது உறவினர்கள் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து குடும்ப தகராறில் தாத்தாவை தாக்கிய மாநகராட்சி ஊழியர் ஜீவானந்தத்தை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்