தமிழ்நாடு செய்திகள்

அனைத்து மக்களுக்குமான சமூக நீதி அரசை நடத்திக் கொண்டிருக்கிறோம் - மு.க.ஸ்டாலின்

Published On 2026-01-09 12:55 IST   |   Update On 2026-01-09 12:55:00 IST
  • பொருளாதாரத்தில் பிற மாநிலங்களை பின்னுக்கு தள்ளி தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
  • மருத்துவ சுற்றுலாவுக்கான மையமாக தமிழ்நாடு மாறி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் 'உங்க கனவ சொல்லுங்க' எனும் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார் அப்போது அவர் கூறியதாவது:

* தமிழ்நாட்டின் வரலாற்றில் இன்றைய நாள் சிறப்பு மிக்க நாள்.

* மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உங்கள் கனவை கேட்டு அதனை நிறைவேற்றும் தொடக்க நாள் இன்று.

* 2030-ம் ஆண்டில் தமிழ்நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதை வடிவமைப்பதற்கான திட்டம்.

* மக்களின் கனவுகளை அவர்களது வீடுகளுக்கே நேரில் சென்று கேட்டறிவும் வகையில் புதிய திட்டம்.

* 11.19% பொருளாதார வளர்ச்சியுடன் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக உள்ளது.

* பொருளாதாரத்தில் பிற மாநிலங்களை பின்னுக்கு தள்ளி தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

* இந்தியாவில் முதலீடு செய்ய நிறுவனங்கள் நினைக்கும்போது அவர்களின் முதல் தேர்வு தமிழகம் தான்.

* விவசாயம், கல்வியிலும் தமிழ்நாடு முன்னோடி மாநிலம்.

* இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், காலைச் சிற்றுண்டி போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறோம்.

* மருத்துவ சுற்றுலாவுக்கான மையமாக தமிழ்நாடு மாறி உள்ளது. பல மாநில மக்களும் சிறந்த மருத்துவத்திற்காக தமிழகம் வருகின்றனர்.

* பிற மாநிலங்களில் தலைநகரங்கள் மட்டுமே வளரும். தமிழ்நாட்டில் மட்டும் தான் பரவலாக வளர்ச்சி.

* அனைத்து மக்களுக்குமான சமூக நீதி அரசை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News