- இந்த பேரூராட்சியில் 10 ஆயிரம் பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
- 3-ம் தவணை தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என்ற இலக்கோடும் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், திட்டச்சேரி பேரூராட்சியில் கடந்த சில மாதங்களாக அரசு மருத்துவமனை சுகாதார துறையினர் மூலம் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை இந்த பேரூராட்சியில் 10 ஆயிரம் பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் 100 சதவீத தடுப்பூசி என்ற இலக்கோடும், 3-ம் தவணை தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என்ற இலக்கோடும் பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன், இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ், கிராம சுகாதார செவிலியர் மரகதம், கிராம நிர்வாக அலுவலர் குமரேசன் மற்றும் சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். நடமாடும் மருத்துவ குழுவினர் புறப்பட்டு பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்துகின்றனர். நேற்று சுமார் 200 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன்மூலம் பேரூராட்சி பகுதியில் 80 சதவீத தடுப்பூசி போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.