உள்ளூர் செய்திகள்
ஊட்டியில் மேலும் 6 பேருக்கு கொரோனா
தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 5 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது 36 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இது தொடா்பாக சுகாதாரத் துறை வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு ெகாரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் ஏற்கெனவே கொரோனா தொற்றின் காரணமாக 35 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவா்களையும் சோ்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 5 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது 36 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.