உள்ளூர் செய்திகள்

ஏற்காட்டில் தொடர் சாரல் மழை

Published On 2022-12-28 09:35 GMT   |   Update On 2022-12-28 09:35 GMT
  • சேலம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது.
  • சேலம் ஆகிய பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் கடும் குளிர் நிலவுகிறது.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் வீரகனூர், ஏற்காடு, தலைவாசல், சேலம், ஓமலூர், தம்மம்பட்டி, சங்ககிரி, கெங்கவல்லி, எடப்பாடி, மேட்டூர் சேலம் ஆகிய பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் கடும் குளிர் நிலவுகிறது.

சேலம் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

ஏற்காடு - 18, கெங்கவல்லி - 10, வீரகனூர் - 10, ஆணைமடுவு - 10, தம்மம்பட்டி - 7.2, எடப்பாடி- 6.6, ஆத்தூர் -4.8, ஓமலூர்- 4, கரிய கோவில் - 4, மேட்டூர் - 1.8, சங்ககிரி - 1.1, கடையாம்பட்டி - 1, சேலம்- 0.6 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 79.10 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News