உள்ளூர் செய்திகள்

சேலம் அரசு கலைக்கல்லூரியில் கலந்தாய்வு நாளை தொடக்கம்

Published On 2022-08-15 08:56 GMT   |   Update On 2022-08-15 08:56 GMT
  • சேலம் அரசு மகளிர் கலை க்கல்லூரியில் 2022-23-ம் ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கான 2-ம் கட்ட சேர்க்கை கலந்தாய்வு நாளை (16-ந்தேதி) நடக்கிறது.
  • 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்ததற்கான சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும்

சேலம்:

சேலம் அரசு மகளிர் கலை க்கல்லூரியில் 2022-23-ம் ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கான 2-ம் கட்ட சேர்க்கை கலந்தாய்வு நாளை (16-ந்தேதி) காலை 10 மணிக்கு தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.

அதன்படி நாளை( 16-ந் தேதி) பி.எஸ்.சி. கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், புள்ளியியல் கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல் ஆகிய பாடங்களுக்கும், 17-ந் தேதி பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், பி.காம் வணிகவியல் ஆகிய பாடங்களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது .

இதில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகள் பிளஸ்-2 மதிப்பெண் சான்றதழ், மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் மற்றும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்ததற்கான சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும் என கல்லூரி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News