உள்ளூர் செய்திகள்

கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பில் கலந்து கொண்டவர்கள். 

சாத்தான்குளத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

Published On 2022-11-02 07:58 GMT   |   Update On 2022-11-02 07:58 GMT
  • சாத்தான்குளம் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
  • 150 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டு அனைவருக்கும் அரசு சார்பில் சீர் வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் வட்டார அளவிலான கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சாத்தான்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் ஜெயபதி தலைமை தாங்கினார். பேரூராட்சித் தலைவர் ரெஜினி ஸ்டெல்லாபாய் முன்னிலை வகித்தார். வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயாதுரைபாண்டியன் வரவேற்றார். இங்குள்ள தனியார் திருமண்டபத்தில் நடைபெற்ற விழாவிற்கு சுற்று வட்டார பகுதியில் இருந்து வந்திருந்த 150 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது. அனைவருக்கும் அரசு சார்பில் சீர் வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய ஆணையர் ராணி , வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தொடர்ந்து கர்ப்பினி பெண்களுக்கு பல வகையான அறுசுவை உணவு வழங்கப்பட்டு, அறிவுரை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திட்ட மேற்பார்வையாளர் வசந்தா, வட்டார ஒருங்கிணைப்பாளர் அருள்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வட்டார திட்ட உதவியாளர் வில்லியம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News