உள்ளூர் செய்திகள்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்ட காட்சி.

கடலூர் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்:பெண்கள் உள்பட 160 பேர் கைது

Published On 2023-09-14 08:10 GMT   |   Update On 2023-09-14 08:10 GMT
  • இந்திைய திணித்து வரும்மத்திய பா.ஜ.க.அரசை கண்டித்து மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.
  • இதன் காரணமாக கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

கடலூர்:

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும். மக்களின் ஒற்றுமையை சீர் குைலப்பதை தடுக்க வேண்டும். இந்திைய திணித்து வரும்மத்திய பா.ஜ.க.அரசை கண்டித்து மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். அதன்படி இன்று காலை கடலூர் அருகே உள்ள மேல்பட்டாம் பாக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் திரண்டனர்.

பின்னர் மேல்பட்டாம்பாக்கம் இரட்டை ரோட்டில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக திரண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாக வந்தனர். பின்னர் மேல்பட்டாம்பாக்கம் காமராஜர் சிலை அருகே கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பப்பட்டன. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 160 பேரை கைது செய்து தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இதன் காரணமாக கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

Tags:    

Similar News