உள்ளூர் செய்திகள்
ஆனந்தி
பண்ருட்டி அருகே கல்லூரி மாணவி மாயம்
- பண்ருட்டி அருகே கல்லூரி மாணவி மாயமானார்.
- இவர் 9-ந்தேதி காலை கல்லூரிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் ஆனந்தி (வயது 18) இவர் 9-ந்தேதி காலை கல்லூரிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. மாணவியை எங்கு தேடியும் கிடைக்காததால் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் இவரது தந்தை சக்திவேல் புகார் அளித்தார். இதுகுறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவியை தேடி வருகிறனர்.