கோவை சங்கிலி கருப்பராயன் கோவில் ஆடி பண்டிகை திருவிழா
- இந்த ஆண்டு 58-ம் ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 17-ந் தேதி தொடங்கியது.
- அசைவ விருந்துடன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சாய்பாபாகாலனி,
கோவை தடாகம் சாலை லாலிரோடு சந்திப்பில் மிகவும் பழமை வாய்ந்த கருப்பராயன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஆடிப்பெருக்கு திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு 58-ம் ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 17-ந் தேதி தொடங்கியது. அதனை தொடர்ந்து 30-ந் தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி, 1-ந் தேதி பவுர்ணமி பூஜையும், 2-ந் தேதி கரகம் மற்றும் சாமி அழைப்பும் நடைபெற்றது.
3-ந் தேதி கருப்ப ராயனுக்கு சிறப்பு அபிஷே கம், நவக்கி ரகஹோமமும் நடந்தது. 8-ந் தேதி கருப்பராயன் கோவில் திருவிழா நடந்தது.
இதனையொட்டி 48 கிடாய்கள், சேவல்கள் பலியிடப்பட்டன. அதனை தொடர்ந்து மறுநாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பூஜை நடந்தது.
விழாவில் கலந்து கொண்ட 2 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் கலந்து கொண்டனர். திருவிழாவையொட்டி அங்கு இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.