உள்ளூர் செய்திகள்
கோவை லோடு வேனில் கஞ்சா கடத்திய டிரைவர் கைது
லோடு வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது, அதில் 2.700 கிலோ கிராம் கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
குனியமுத்தூர்:
கோவை போத்தனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேஷ் தலைமையில் செட்டிபாளையம் ஈச்சனாரி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லோடு வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் 2.700 கிலோ கிராம் கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சா கடத்தி வந்த பிள்ளையார் புரத்தைச் சேர்ந்த தங்கபாண்டியை கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.மேலும் அவரிடம் இருந்து கஞ்சா மற்றும் வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.