உள்ளூர் செய்திகள்

திருவெண்ணைநல்லூர் அருகே இரு தரப்பினரிடையே மோதலில்8 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது

Published On 2023-08-05 07:35 GMT   |   Update On 2023-08-05 07:35 GMT
  • மோட்டார் சைக்கிளில் கோவிந்தராஜ் வீட்டின் எதிரே வந்தனர்.
  • எதற்காக என் வீட்டின் எதிரில் இதுபோல செய்கிறீர்கள் என தட்டிக் கேட்டார்.

விழுப்புரம்:

திருவெண்ணை நல்லூர் அருகே காந்தளவாடி கிராமம் உள்ளது. இங்கு கோவிந்தராஜ் (வயது 37) வசித்து வருகிறார். அதே ஊரில் வசிப்பவர்கள் தேவநாதன் (35), ரத்தினவேல், மருதபாண்டியன், அருண் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் கோவிந்தராஜ் வீட்டின் எதிரே வந்தனர். அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு ஹாரன் அடித்தபடி, மோட்டார் சைக்கிளின் ஆக்சிலேட்டரை திருகி பலத்த சத்தத்தை எழுப்பினர். மேலும், இதனை அடிக்கடி செய்து வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தராஜ், எதற்காக என் வீட்டின் எதிரில் இதுபோல செய்கிறீர்கள் என தட்டிக் கேட்டார். இது அரசாங்கத்தால் போடப்பட்ட சாலை, இங்கு நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம். இதற்கு தான் நாங்கள் சாலை வரி கட்டுகிறோம் என்று தேவநாதன் மற்றும் 3 பேரும் கூறினார்கள். தொடர்ந்து நடைபெற்ற வாக்குவாதம் தகராறாக மாறியது.

இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரும் சேர்ந்து கோவிந்தராஜை தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த கோவிந்தராஜை அவரது குடும்பத்தார் மீட்டனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேவநாதனை கைது செய்தனர். ரத்தினவேல், மருதபாண்டியன், அருண் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். போலீசாரால் தேடப்படும் மருதபாண்டியனின் மனைவி சிந்துஜா அளித்த புகாரின் பேரில், கோவிந்தராஜ், கோத ண்டபாணி, ராமானுஜம், ஜோதி ஆகியோர் மீது திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News