உள்ளூர் செய்திகள்

தஞ்சை பெரிய கோவில் முன்பு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

தஞ்சை பெரிய கோவிலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி

Published On 2023-11-27 09:54 GMT   |   Update On 2023-11-27 09:54 GMT
  • சொக்கப்பனைக்குள் பட்டாசுகள் போடப்பட்டு இருந்ததால் அதுவும் வெடித்தன.
  • மேலும், அந்த சாம்பலை தங்கள் வீடுகளுக்கும் கொண்டு சென்றனர்.

தஞ்சாவூர்:

கார்த்திகை தீபத்திரு நாளை முன்னிட்டு நேற்று மாலை தஞ்சாவூர் பெரிய கோவில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக பெருவு டையார்-பெரியநாயகி அம்மன் சிறப்பு அலங்கா ரத்தில் கோவில் நுழைவு கோபுரவாசல் அருகே சொக்கப்பனை வைத்திருக்கும் இடத்தில் எழுந்தருளினர்.

அங்கு சிறப்பு ஆராதனை காண்பிக்கப்பட்டு, அந்த தீபச்சுடரால் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. எரிகின்ற சொக்கப்பனையை அக்னிமய லிங்கமாக பக்தர்கள் வணங்கினர்.

மேலும் சொக்கப்பனைக்குள் பட்டாசுகள் போடப்பட்டு இருந்ததால், அந்த பட்டாசுகளும் வெடித்தன.

சொக்கப்பனை கொளுத்தி முடித்தபிறகு அந்த சாம்பலை பக்தர்கள் எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டனர்.

மேலும் அந்த சாம்பலை தங்கள் வீடுகளுக்கும் கொண்டு சென்றனர்.

Tags:    

Similar News