உள்ளூர் செய்திகள்

குளத்தில் முழ்கிய சிறுவர்களை காப்பாற்றி கல்பனா சால்வா விருது பெற்ற எழிலரசிக்கு பாராட்டு சான்று.

தூய்மைப் பணிக்கான சான்று வழங்கும் விழா

Published On 2022-08-28 10:06 GMT   |   Update On 2022-08-28 10:06 GMT
  • தூய்மை பணியில் சிறப்பாக ஈடுபட்ட நகராட்சி பணியாளர்கள் வர்த்தகர்கள் சேவை சங்கங்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.
  • விழிப்புணர்வு பேரணியில் போதை எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பி துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் நகராட்சியின் சார்பில்ராஜாஜி பூங்காவில் தூய்மை பணிக்கான சான்று வழங்கும் விழா நடைபெற்றது

விழாவிற்கு நகர மன்ற தலைவர் புகழேந்தி தலைமை வகித்து தூய்மை பணியில் சிறப்பாக ஈடுபட்ட நகராட்சி பணியாளர்கள் வர்த்தகர்கள் சேவை சங்கங்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார் நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ஹேமலதா பொறியாளர் முகமது இப்ராகிம் துணைத் தலைவர் மங்களநாயகிநகர மன்ற உறுப்பினர்கள் உமா, நடராஜன், மயில்வாகனம் ,அனிஸ்பாத்திமா.பிரியும் அறக்கட்டளை பிரபு வர்த்தக சங்க பொருளாளர் சீனிவாசன் ரோட்டரி சங்கத் தலைவர் செந்தில் தொழிலதிபர் ஆறுமுகம்மற்றும் நகராட்சி பணியாளர்கள் குருகுலம் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்

நிகழ்ச்சியில் வேதாரண்ய த்தை சேர்ந்த தேவி பாலுவின் மகள் எழிலரசி குளத்தில் விழுந்த இரு சிறுவர்களை காப்பாற்றியதற்காக தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது பெற்றுள்ளார். இவருக்கு நகராட்சியின் சார்பில் நகர மன்ற தலைவர் புகழேந்தி சால்வை அணிவித்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்

நிகழ்ச்சி முடிவில் என் குப்பை என் பொறுப்பு என்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் பின்பு ராஜாஜி பூங்காவில் இருந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி புறப்பட்டு மேல வீதி வடக்கு வீதி வழியாக நகராட்சி சென்றடைந்தது விழிப்புணர்வு பேரணியில் போதை எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பி துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

Tags:    

Similar News