உள்ளூர் செய்திகள்

கோவையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் பலி

Published On 2022-06-25 10:20 GMT   |   Update On 2022-06-25 10:20 GMT
  • கடந்த 2009-ம் ஆண்டு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக பணியில் சேர்ந்தார்.
  • வீட்டு மாடிப்படியில் இறங்கியபோது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி தவறி கீழே விழுந்தார்.

கோவை:

தூத்துக்குடி அண்ணாநகர் 11-வது வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 36).

இவர் கடந்த 2009-ம் ஆண்டு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக பணியில் சேர்ந்தார். மதுரை விமான நிலையத்தில் பணிபுரிந்த அவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோவை விமான நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

தற்போது விடுப்பில் உள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் தனது மனைவி முருகேஷ்வரி(32), மகள் மதுஸ்ரீ(5), மகன் அக்‌ஷத்(3) ஆகியோருடன் சிங்காநல்லூர் கமலாமில் காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டுக்கு நேற்று குடி வந்தனர்.

இரவு அவர் வீட்டு மாடிப்படியில் இறங்கியபோது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி தவறி கீழே விழுந்தார். அதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News