உள்ளூர் செய்திகள்

கார் கண்ணாடியை உடைத்து நகை, பணம், செல்போன் திருட்டு

Published On 2023-10-29 08:48 GMT   |   Update On 2023-10-29 08:48 GMT
  • திண்டிவனம் புறவழிச் சாலை அருகே உள்ள தனியார் ஓட்டலுக்கு எதிரே காரை நிறுத்தினார்.
  • பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

விழுப்புரம்:

திண்டிவனம் அடுத்த ஆட்சிபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 42). இவர் தனது காரில் மனைவி சூரியசந்திரகலா மற்றும் குழந்தையுடன் திருப்பதிக்கு சென்றார். மீண்டும் திருப்பதியில் இருந்து திண்டிவனம் வந்தார். திண்டிவனம் புறவழிச் சாலை அருகே உள்ள தனியார் ஓட்டலுக்கு எதிரே காரை நிறுத்தினார். காரிலேயே குழந்தையின் தங்க நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணம், செல்போன் ஆகியவற்றை வைத்துவிட்டு ஓட்டலுக்குள் குடும்பத்துடன் சாப்பிட சென்றார்.

சாப்பிட்டுவிட்டு மீண்டும் வந்து பார்த்த போது காரின் வலதுபுறம், பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். காரின் உள்ளே பார்த்த போது ஒரு பவுன் தங்க நகை, 10 ஆயிரம் ரூபாய், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போன் ஆகியவற்றை காரின் கண்ணாடியை உடைத்து மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்த திண்டிவனம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்து காரின் கண்ணாடியை உடைத்து நகை, பணம், செல்போனை திருடிய கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News