உள்ளூர் செய்திகள்

விருத்தாசலம் அருகே திருமணமான 8 நாளில் புதுப்பெண் தற்கொலை

Published On 2022-09-09 08:21 GMT   |   Update On 2022-09-09 08:21 GMT
  • பன்னீர்செல்வம் இன்ஜினியரிங் படித்துள்ளார், சந்தியா டிப்ளமோ அக்ரி படித்து முடித்துள்ளார்.
  • கணவர், உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அறையில் உள்ள மின்விசிறியில் புடவையால் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு கூச்சலிட்டு உள்ளனர்.

கடலூர்: 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே புதுக்கூரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் முருகன். அவரது மகன் பன்னீர்செல்வம். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த தெய்வசிகாமணி என்பவரின் மகள் சந்தியாவிற்கும் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. பன்னீர்செல்வம் இன்ஜினியரிங் படித்துள்ளார், சந்தியா டிப்ளமோ அக்ரி படித்து முடித்துள்ளார்.

நேற்று காலை தனது கணவனான பன்னீர்செல்வம் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த சந்தியா குளித்துவிட்டு வருவதாக அவரது அறைக்குள் சென்றார். கூறப்படுகிறது. வெகு நேரமாகியும் சந்தியா வெளியே வராததை கண்ட அவரது கணவர் கதவைத்தட்டி உள்ளார். ஆனால் திறக்காததை கண்டு அதிர்ச்சி அடைந்த கணவர், உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அறையில் உள்ள மின்விசிறியில் புடவையால் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு கூச்சலிட்டு உள்ளனர். உடனடியாக விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில்,விரைந்து வந்த போலீசார் சந்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

சந்தியாவின் கணவர் பன்னீர் செல்வத்தை காவல்துறையினர் ,கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் ஆன ஒரே வாரத்தில் பெண் மரணம் அடைந்ததால் விருத்தாசலம் சார் ஆட்சியர் பழனி தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News