உள்ளூர் செய்திகள்

வடலூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு :வாலிபர் கைது

Published On 2023-08-28 07:02 GMT   |   Update On 2023-08-28 07:02 GMT
  • உண்டியலை யாரோ மர்ம ஆசாமிகள் உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றுவிட்டனர்.
  • கோவில் கேட் மற்றும் உண்டியல் உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கடலூர்:

வடலூரை அடுத்த மேட்டுக்குப்பம் கிராமத்தில் பள்ளிக்கூட தெருவில் உள்ள சக்திமாரியம்மன் கோவிலில் உள்ள உண்டியலை யாரோ மர்ம ஆசாமிகள் உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றுவிட்டனர். காலை கோவில் பூசாரி ஜோதி வழக்கம் போல் வந்தார். அப்போது கோவில் கேட் மற்றும் உண்டியல் உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து வடலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த சந்துரு (வயது 22) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News