உள்ளூர் செய்திகள்

திசையன்விளை அருகே விஷம் குடித்து சிறுவன் தற்கொலை

Published On 2023-09-28 09:08 GMT   |   Update On 2023-09-28 09:08 GMT
  • திசையன்விளை அருகே உள்ள உவரியை அடுத்த வெம்மனங்குடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுயம்பு. இவருக்கு 5 பெண் குழந்தைகளும், இசக்கிமுத்து(வயது 14) என்ற மகனும் உள்ளனர்.
  • இசக்கிமுத்து நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தான்.

திசையன்விளை:

திசையன்விளை அருகே உள்ள உவரியை அடுத்த வெம்மனங்குடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுயம்பு. இவருக்கு 5 பெண் குழந்தைகளும், இசக்கிமுத்து(வயது 14) என்ற மகனும் உள்ளனர். இசக்கிமுத்து 7-ம் வகுப்பு வரை படித்துள்ளான். இவன் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தான். இதனை அந்த வழியாக சென்றவர்கள் அவனை மீட்டு திசையன்விளையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சிறுவன் இசக்கிமுத்து பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய சாந்தி வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றார். இசக்கிமுத்து தனது தந்தையிடம், புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவரது பெற்றோர் மறுத்துவிட்டனர். இதனால் மனம் உடைந்து அவர் தற்கொலை செய்திருக்கலாமா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News