உள்ளூர் செய்திகள்

அடிக்கல் நாட்டு விழா நடைபெற்ற போது எடுத்த படம்.

வாசுதேவநல்லூர் அருகே தலையணை ஆற்றுப்படுகையில் கிணறு அமைப்பதற்கான பூமி பூஜை

Published On 2023-07-02 14:29 IST   |   Update On 2023-07-02 14:29:00 IST
  • பூமிபூஜை, அடிக்கல் நாட்டு விழாவிற்கு ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
  • நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் முத்தையா பாண்டியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சிவகிரி:

வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் கோட்டையூர் ஊராட்சி ஆத்துவழி கிராமத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 48 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பீட்டில் தலையணை ஆற்றுப்படுகையில் கிணறு அமைப்பதற்கான பூமிபூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

அடிக்கல்

நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பூமி பூஜையை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டி வைத்தார். சதன் திருமலைக் குமார் எம்.எல்.ஏ., வாசு. யூனியன் சேர்மன் முத்தையா பாண்டியன், தலைமை செயற்குழு உறுப்பினர் சீனி வாசன், மாவட்ட துணைச் செய லாளர் மனோகரன், வாசு. யூனியன் வட்டார வள ர்ச்சி அலுவலகர்கள் கணே சன், ரவிச் சந்திரன், துணை சேர்மன் சந்திர மோகன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

கோட்டையூர் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் குமார், துணைத் தலைவர் பிரதீபன் ஆகியோர் வரவேற்று பேசினர். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் சந்திர லீலா, ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெய ராமன், விஜய பாண்டியன், உதவி பொறி யாளர்கள் மார்கோனி, அருள் நாராயணன், தமிழர் விடுதலை கழகம் நிறுவனத் தலைவர் ராஜ்குமார், மாநில துணைத் தலைவர் சாமி, டி.டி.வி. ஹைடெக் சேம்பர் பிரிக்ஸ் பிரேம்குமார், ஜெய விநாயகா புளு மெட்டல்ஸ் ஸ்ரீகாந்த் பாலாஜி, கவுன்சி லர்கள் கார்த்திகேயன், முருகே சன், வள்ளியம்மாள், மகேஸ்வரி, அப்பாஸ், சிப்பி ராள், ருக்குமணி, பாக்கிய லட்சுமி, ஊர் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொ ண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் லதா நன்றி கூறினார்.

Tags:    

Similar News