உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவர்கள் ரத்ததானம் செய்த காட்சி. 

கல்லூரி மாணவர்கள் சார்பில் ரத்ததானம்

Published On 2022-06-14 07:13 GMT   |   Update On 2022-06-14 07:13 GMT
  • உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் ரத்ததானம் கல்லூரி மாணவர்கள் செய்தனர்.
  • ஆண்டுதோறும் அலகு -2 சார்பாக ரத்த தானம் வழங்குவதை கொள்கையாகவே வைத்துள்ளனர,

திருப்பூர்:

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 சார்பாக உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்தனர். முன்னதாக மருத்துவர் வசந்தகுமார்இரத்த தானம் ஏன் வழங்க வேண்டும், யாரெல்லாம் ரத்த தானம் வழங்கலாம் என்று மாணவர்களுக்கு விளக்கிகூறினார். மேலும் தானம் செய்யும்இரத்தம் பல உயிர்களை காப்பாற்ற பயன்படுகிறது. ரத்த தானம் செய்ய மாணவர்கள் முன்வரவேண்டும் என்றார்.

அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் கூறுகையில் , ஆண்டுதோறும் அலகு -2 சார்பாக ரத்த தானம் வழங்குவதை கொள்கையாகவே வைத்துள்ளோம். முகம் தெரியாத உயிரை காப்பாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். பின்பு மாணவ பிரதிநிதி பாலசுப்பிரமணியன் தலைமையில் 17 யூனிட்ரத்த தானம் வழங்கினர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

Tags:    

Similar News