பொள்ளாச்சியில் 13-ந் தேதி பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
- ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக்கோரி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தில் தமிழகத்திற்கு 30.5 டிஎம்சியும், கேரளத்திற்கு 19.55 டிஎம்சியும் தண்ணீர் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
கோவை:
ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக்கோரி வருகிற 13-ந் தேதி பாரதீய ஜனதா சார்பில் பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தில் தமிழகத்திற்கு 30.5 டிஎம்சியும், கேரளத்திற்கு 19.55 டிஎம்சியும் தண்ணீர் பகிர்ந்து கொள்ள வேண்டும். கேரளத்திற்கு ஒப்பந்தப்படிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 30.5 டிஎம்சி தண்ணீர் கிடைப் பதில்லை. தண்ணீர் கிடைக்கா ததற்கு காரணம் ஆனை மலையாறு மற்றும் நல்லாறு திட்டம் நிறைவேற் றப்படாமல் இருப்பது முக்கிய காரணமாக உள்ளது.
இந்த திட்டத்தை நிறைவேற்றக்கோரி விவசாயிகள் நீண்ட கால கோரிக்கை விடுத்துவருகின்றனர். ஆனால், தற்போதுவரை திட்டம் நிறைவேற்றப்படவில்லை.
இதனால், விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற 13-ந் தேதி பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா சார்பில்ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டத்தை நிறைவேற்றகோரிக்கை வைத்து மாவட்டத்தலைவர் வசந்தராஜன்தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன ்சத்திரத்திற்கு தண்ணீர்கொண்டு செல்லும் திட்டத்தை ரத்து செய்யக கோரியும கோரிக்கை வைக்கப்பட உள்ளது.