உள்ளூர் செய்திகள்

சிகிச்சை பெற்று வருபவர்களை பா.ஜனதா.வினர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்களுக்கு ஆறுதல் கூறிய பா.ஜனதா.வினர்

Published On 2023-10-09 09:37 GMT   |   Update On 2023-10-09 09:37 GMT
  • கடந்த 7-ந் தேதி இலங்கை கடற்கொள்ளையர்கள் அரிவாளால் தாக்கப்பட்டனர்.
  • காயம் அடைந்தவர்கள் நாகை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் வேதா ரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் மீனவர்க ளை வேதாரண்யம் அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது கடந்த 7-ம் தேதி இலங்கை கடற்கொ ள்ளையர்கள் அரிவாளால் தாக்கி அவர்களிடமிருந்து வலை, ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி உள்ளிட்ட பொரு ட்களை கொள்ளையடித்து சென்றனர்.

கொள்ளையர்கள் தாக்குத லில் காயமடைந்த வெள்ளப்பள்ளத்தை சேர்ந்த மணியன், வேல்முருகன், சத்யராஜ், அக்கரைப்பே ட்டையைச் சேர்ந்த கோடி லிங்கம் ஆகியோர் நாகை அரசு தலைமை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களை பாஜக மாவட்ட தலைவர் கார்த்தி கேயன் தலைமையில் மாவட்ட செயலாளர் விஜேயந்திரன், விவசாய அணித் தலைவர் சின்னப்பிள்ளை, ஆன்மிக பிரிவு தலைவர் கஜேந்திரன் உள்ளிட்ட பாஜக நிர்வாகள் நேரில் சந்தித்து சம்பவம் குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினர்.

மேலும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணா மலை மூலமாக மத்திய அரசிடம் பேசி மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பா டுகளை செய்து தர நடவடி க்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

Tags:    

Similar News