உள்ளூர் செய்திகள்
ஊட்டியில் பா.ஜ.கவினர் ஆர்ப்பாட்டம்
- மின் கட்டணத்தை உயா்த்துவதாக அறிவித்துள்ளதை கண்டித்து நடந்தது.
- நீலகிரி மாவட்ட பா.ஜ.க. தலைவா் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊட்டி:
தமிழக அரசு மின் கட்டணத்தை உயா்த்துவதாக அறிவித்துள்ளதை கண்டித்து நீலகிரி மாவட்ட பாஜக சாா்பில் ஊட்டியில் கலெக்டர் அலுவலகத்துக்கு நீலகிரி மாவட்ட பா.ஜ.க. தலைவா் மோகன்ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட பொதுச் செயலாளா் ஈஸ்வரன், குமாா், பரமேஸ்வரன், மாநில செயற்குழு உறுப்பினா் ராமன், விவசாய அணி செயலாளா் சௌந்தரபாண்டியன் மற்றும் சபீதா போஜன், பிரவீன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். அப்போது, மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளதை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கோஷங்களை எழுப்பினா்.