அம்பையில் பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
- அம்பாசமுத்திரம் பாரத் ஸ்டேட் வங்கி எதிரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- நகர மகளிரணி தலைவி சுமதி உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.
கல்லிடைக்குறிச்சி:
இந்துக்கள் பற்றி தி.மு.க. எம்.பி. ஆ.ராசா அவதூறாக பேசியதாக கூறி அவரை கண்டித்து அம்பாசமுத்திரம் பாரத் ஸ்டேட் வங்கி எதிரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பா.ஜ.க. நகரத் தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் ராம்ராஜ் பாண்டியன் முன்னிலை வகித்தார். ஊரக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில துணைத்தலைவர் லெட்சுமண ராஜா, வீகேபுரம் நகர தலைவர் தங்கேஸ்வரன், நகர பிரபாகரி பால்பாண்டி, அம்பை ஒன்றிய தலைவர் சண்முக பிரகாஷ், சேரை மேற்கு ஒன்றிய தலைவர் ராஜேந்திர பிரசாத், சேரை கிழக்கு ஒன்றிய தலைவர் சின்ன முருகன், அம்பை நகர பொதுச்செயலாளர்கள் சுகுமாரன், சுதன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் சிவராமகிருஷ்ணன், மகளிரணி பொதுச்செயலாளர் செல்வி சுப்பிரமணியன்,நகர துணைத்தலைவர்கள் செல்வராஜ், வன்னியப்பன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட துணைத்தலைவர் உதயகுமார், நகர மகளிரணி தலைவி சுமதி, நகர இளைஞரணி தலைவர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.