உள்ளூர் செய்திகள்

அட்மா திட்ட விவசாயிகளுக்கான அசோலா, பசுந்தீவனம் உற்பத்தி பயிற்சி நடைபெற்ற போது எடுத்த படம்.

தளிகை கிராம விவசாயிகளுக்கு அசோலா, பசுந்தீவனம் உற்பத்தி பயிற்சி

Published On 2023-02-23 09:50 GMT   |   Update On 2023-02-23 09:50 GMT
  • அட்மா திட்டத்தின் கீழ் அசோலா தீவனம் மற்றும் பசுந்தீவனம் உற்பத்தி குறித்த பயிற்சி, தளிகை கிராம கால்நடைகள் வளர்ப்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
  • தளிகை கிராம கால்நடை பராமரிப்புத்துறையின் கால்நடை மருந்தக உதவி மருத்துவர் ஜெயந்தி கால்நடைகளுக்குத் தேவையான சத்து மிகுந்த பசுந்தீவனம் குறித்து பயிற்சியளித்தார்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் வட்டாரம் வேளாண்மை-உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் அட்மா திட்டத்தின் கீழ் அசோலா தீவனம் மற்றும் பசுந்தீவனம் உற்பத்தி குறித்த பயிற்சி, தளிகை கிராம கால்நடைகள் வளர்ப்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

சிறப்பு பயிற்றுநரான குமாரப்பாளையம், ரிட்டிக்ஷா சுற்றுசூழல் பண்ணை மற்றும் வர்த்தக மேலாளர் மதன்ராஜ், அசோலா உற்பத்தியும் அதன் பயன்பாடுகளும், அசோலாவின் வகைகள், அதில் உள்ள சத்துக்கள், பாத்திகளில் அசோலா உற்பத்தி, பராமரிப்பு, அறுவடை போன்ற தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு செயல் விளக்கத்துடன் பயிற்சி வழங்கினார்.

தளிகை கிராம கால்நடை பராமரிப்புத்துறையின் கால்நடை மருந்தக உதவி மருத்துவர் ஜெயந்தி கால்நடைகளுக்குத் தேவையான சத்து மிகுந்த பசுந்தீவனம் குறித்து பயிற்சியளித்தார். நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா, அசோலா மற்றும் பசுந்தீவன உற்பத்தியின் அவசியம் குறித்து பயிற்சி வழங்கினார்.

வேளாண்மை அலுவலர் ரசிகபிரியா, உதவி வேளாண்மை அலுவலர் திலீப்குமார், தோட்டக்கலைத்துறை உதவி தோட்டக்கலை அலுவலர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் துறை சார்ந்த மானியத்திட்டங்களை எடுத்துக்கூறினர்.

அட்மா திட்ட வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ், உதவி தொழில்நுட்ப மேலாளர் கவிசங்கர் ஆகியோர் இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்த னர். பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு உழவன் செயலி பதிவேற்றம் செய்து, பயன்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

Tags:    

Similar News