உள்ளூர் செய்திகள்

அய்யப்ப ரத ஊர்வலம் நடந்தது.

மண்டல பூஜை திருவிழாவை முன்னிட்டு அய்யப்ப ரத ஊர்வலம்

Published On 2022-12-27 07:53 GMT   |   Update On 2022-12-27 07:53 GMT
  • 100-க்கும் மேற்பட்ட சிறுமிகளின் அகல் விளக்கு ஊர்வலம் நடந்தது.
  • வீட்டு வாசலில் அனைவரும் வண்ண கோலமிட்டு விளக்கேற்றி வரவேற்றனர்.

மதுக்கூர்:

மதுக்கூர் ஒன்றியம் புலவஞ்சி கிராமத்தில் தர்மா சாஸ்தா பெரும்பாதை ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் 15 ஆம் ஆண்டு மண்டல பூஜை திருவிழா நடைபெற்றது.

இதனை முன்னிட்டு தெய்வத்திரு குருசாமிக்கள் கலியமூர்த்தி, சாத்தையன் ஆகியோரின் அருளால் ஐயப்ப சாமியின் மண்டல பூஜை திருவிழா மற்றும் ஐயப்ப ரத ஊர்வலமும் சிறுமிகளின் அகல் விளக்கு ஊர்வலமும் நடைபெற்றது.

முத்து மாரியம்மன் கோயிலில் கணபதி ஹோமம் நடந்தது. இதை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

நேற்று மாலை புலவஞ்சி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள பிள்ளையார் கோவிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக மாரியம்மன் கோயில் வரை ஐயப்பன் ரத ஊர்வலம் சென்றடைந்தது.

பின்னர் ஸ்ரீ காமன் கோவில்களில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக பிள்ளையார் கோவில் வரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுமிகள் அகல் விளக்கு ஊர்வலம் நடந்தது.

இதனை அடுத்து அவர் அவர் வீட்டு வாசலில் அனைவரும் கோலமிட்டு விளக்கு ஏற்றி வரவேற்றனர். இந்த விழாவினை அடுத்து மெய்யன்பர்களும் ஐயப்ப பக்தர்களும் கிராம வாசிகளும் கலந்து கொண்டு அய்யன் அருள் பெற்றனர்.

மேலும் குருசாமி முருகையன் சுவாமி ஐயப்ப பக்தர்களும் மற்றும் புலவஞ்சி கிராமவாசிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags:    

Similar News