உள்ளூர் செய்திகள்
தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்.
தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம்
- தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் திருக்கல்யாண திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது
- காலையில் உலகம்மன் திருத்தேரில் வலம் வரும் நிகழ்ச்சி தொடங்கியது.
தென்காசி:
தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் திருக்கல்யாண திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் தொடர் நிகழ்ச்சியாக இன்று காலையில் உலகம்மன் திருத்தேரில் வலம் வரும் நிகழ்ச்சி தொடங்கியது.
இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பாதுகாப்பு பணியில் தென்காசி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.