உள்ளூர் செய்திகள்

மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது.

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி

Published On 2022-06-16 15:30 IST   |   Update On 2022-06-16 15:30:00 IST
  • கொரோனா காரணமாக பள்ளிகள் நடைபெறவில்லை இதனையடுத்து மாணவர்கள் கல்வி அறிவு பெற வேண்டும்.
  • அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி முக்கூட்டு சாலை, புதுத்தெரு, கொள்ளை தெரு மெயின் ரோடு வழியாக திரும்ப பள்ளிக்கு வந்தடைந்தது.

மதுக்கூர்:

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்கா மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு நடைபெறுவதை முன்னிட்டு மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

கடந்த சில ஆண்டுகளாக கொரோனா காரணமாக பள்ளிகளில் பள்ளிகள் நடைபெறவில்லை இதனை யடுத்து மாணவர்கள் கல்வி அறிவு பெற வேண்டும் என்பதற்காக ஆங்காங்கே மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுப் பேரணி என பல வகைகளில் நடைபெற்று வருகின்றது

இதன் ஒரு பகுதியாக மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இந்த பேரணியை பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரகாஷ் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்தப் பேரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆரம்பித்து முக்கூட்டு சாலை, புதுத்தெரு, கொள்ளை தெரு மெயின் ரோடு வழியாக திரும்ப அரசு ஆண்கள் பள்ளியில் முடிவடைந்தது

இதில் சென்ற பள்ளி மாணவர்கள் சேர்ப்போம் சேர்ப்போம் பள்ளியில் சேர்ப்போம், கல்வி என்பது அடிப்படை உரிமை அதை யாரும் மறுத்தாள் அடைப்போம் சிறையில் அடைப்போம் என்று முழக்கங்களை எழுப்பியவாறு சென்றனர்.இதில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ், ஆசிரியர்கள் மணிகண்டன், ஸ்ரீராம், சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் மாணவர்களை வழி நடத்தினர் மேலும் பல ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News