உள்ளூர் செய்திகள்

பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2022-11-01 09:12 GMT   |   Update On 2022-11-01 09:12 GMT
  • பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு.
  • இறுதியாக மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

நீடாமங்கலம்:

நாச்சியார் கோவில் அரசு மருத்துவமனை வளாகத்தில், திருநறையூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு, "பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள்" குறித்த விழிப்புணர்வு மற்றும் எவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்வது? என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் நாச்சியார் கோவில் அரசு மருத்துவர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக திருவிடைமருதூர் டிஎஸ்பி ஜாபர் சித்திக் கலந்து கொண்டார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் சித்த மருத்துவர் ஜெயந்தி, நாச்சியார் கோவில் இன்ஸ்பெக்டர் ரேகா ராணி, திருநறையூர் அரசு பெண்கள் பள்ளி ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் இறுதியாக மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நாச்சியார்கோவில் அரசு மருத்துவமனையில் இருந்து தொடங்கி திருநறையூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேரணி முடிவுற்றது.

Tags:    

Similar News