உள்ளூர் செய்திகள்

சைக்கிள் பேரணி நடைபெற்றது.

விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

Published On 2022-07-28 09:17 GMT   |   Update On 2022-07-28 09:17 GMT
  • குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பது குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
  • துணிப்பையை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மஞ்சப்பை மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

நாகப்பட்டினம்:

திட்டச்சேரி பேரூராட்சி சார்பில் ஒட்டுமொத்த தூய்மை பணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா சித்திக்கா தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன் முன்னிலை வகித்தார். இதில் பொதுமக்களுக்கு ஸ்வச்சதா செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது, குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பது குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

அதை தொடர்ந்து அனைத்து தெருக்களிலும் ஒட்டுமொத்த தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு பிளாஸ்டிக் பை பயன்படுத்துவதை தவிர்த்து துணிப்பையை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மஞ்சப்பை மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரதிநிதிகளுக்கு திடக்கழிவை உரமாக்குதல் குறித்து உரம் தயாரிக்கும் மையத்திற்கு அழைத்து சென்று விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ், வரி தண்டலர் ஜெகவீரபாண்டியன், அலுவலக உதவியாளர் மாதவன், அமானுல்லா, அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News