உள்ளூர் செய்திகள்

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆவணி மாத பிரதோஷ வழிபாட்டையொட்டி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆவணி மாத பிரதோஷ வழிபாடு ஏராளமானோர் குவிந்தனர்

Published On 2023-08-29 07:38 GMT   |   Update On 2023-08-29 07:38 GMT
  • ஆவணி மாதம் சோமவார பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.
  • பிரதோஷ வழி பாட்டை காண ஏராளமான வந்திருந்தனர்.

கடலூர்: 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையில் அமைந் துள்ளது வீரட்டானேஸ்வரர் கோவில். இங்கு பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஆவணி மாதம் சோமவார பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு அபிஷேகம், ஆராதனை, விசேஷ பூஜை ஆகியவை களை தொடர்ந்து மகா தீபாராதனையும், பின்னர் நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கு இடையே சிவனின் நடனக்காட்சி காணும்ஐதீக நிகழ்வும் நடந்தது. மாலை 6 மணிக்கு பிரதோஷ நாதர் ரிஷப வாகனத்தில் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பிரகார வலம் வரும் நிகழ்ச்சியும், அருள்பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது,

பிரதோஷ விரதம் சிவபெருமானுக்குரிய மிக உயர்வான விரதம் என்பதால் இந்த நாளில் விரதம் இருந்து சிவபெரு மானையும், நந்தி தேவரையும் அருகம்புல் மற்றும் வில்வம் சாத்தி வழிபட்டால் அனைத்து விதமான பாவங்களும் நீங்கி சிவபதம் கிடைக்கும் என்பதால் பிரதோஷ வழி பாட்டை காண ஏராளமான வந்திருந்தனர். வேண்டுதல் நிறைவே றவும், நேர்த்திக்கடனுக் காவும், பெண்கள் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். இதில் வர்த்தக சங்க தலைவர் சண்முகம், செயலாளர் வீரப்பன், பெண்கள் பள்ளி செயலாளர் மாதவன், நகைக்கடை அதிபர் சரவணன், பிரதோஷ உற்சவ தாரர் வீரமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News