உள்ளூர் செய்திகள்

மனு கொடுக்க வந்த பொதுமக்கள்.

ஆட்டையாம்பட்டியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு

Published On 2022-11-07 15:18 IST   |   Update On 2022-11-07 15:18:00 IST
  • சேலம் ஆட்டையாம்பட்டி 13-வது வார்டு பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
  • ஊருக்கு நடுவில் டவர் அமைத்தால் பல்வேறு நோய்கள் ஏற்படும் என மக்கள் மத்தியில் அச்சம் உள்ளது.

சேலம்:

சேலம் ஆட்டையாம்பட்டி மாரி வீதி, மூவேந்தர் வீதி மற்றும் திருமலை வீதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.

அந்த மனுவில், சேலம் ஆட்டையாம்பட்டி 13-வது வார்டு பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் தனியார் மருத்துவமனையும் செயல்பட்டு வருகிறது.

இதன் மையப் பகுதியில் புதிதாக தனியார் செல்போன் டவர் அமைக்க சிலர் முயற்சி செய்து வருகின்றனர். ஊருக்கு நடுவில் டவர் அமைத்தால் பல்வேறு நோய்கள் ஏற்படும் என மக்கள் மத்தியில் அச்சம் உள்ளது. எனவே செல்போன் டவர் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என தெரிவித்து இருந்தனர்.    

Tags:    

Similar News