உள்ளூர் செய்திகள்
உவரி அருகே வாலிபர் மீது தாக்குதல் - அண்ணன், தம்பிக்கு வலைவீச்சு
- கிருஷ்ணகுமாருக்கும் , அதே ஊரை சேர்ந்த ஈசாக் குடும்பத்திற்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
- சம்பவத்தன்று ஈசாக் மகன்கள் தாமஸ், தினேஷ் ஆகியோர் கிருஷ்ணகுமார் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கம்பியால் தாக்கினர்.
திசையன்விளை:
உவரி அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 25). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த ஈசாக் குடும்பத்திற்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று ஈசாக் மகன்கள் தாமஸ் (25), தினேஷ் (23) ஆகியோர் கிருஷ்ணகுமார் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கம்பியால் தலையில் அடித்து ரத்தகாயம் ஏற்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக உவரி போலீசில் கிருஷ்ணகுமார் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நதியா வழக்குப்பதிவு செய்து அண்ணன் ,தம்பியை வலைவீசி தேடி வருகிறார்.