உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே தொழிலாளி மீது தாக்குதல்

Published On 2023-07-01 14:22 IST   |   Update On 2023-07-01 14:22:00 IST
  • பக்தவச்சலம் குச்சியால் தூக்கி பிடித்த போது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது‌‌.
  • பக்தவச்சலத்தை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

கடலூர் :

கடலூர் அடுத்த பில்லாலி சேர்ந்தவர் பக்தவச்சலம் (வயது 55) . தொழிலாளி.அதே பகுதியை சேர்ந்தவர் மணி. சம்பவத்தன்று கோவில் திருவிழா காரணமாக சாமி ஊர்வலம் வரும்போது பக்தவச்சலம் மணி வீட்டின் முன்பு இருந்த மின் ஒயர் தடுத்ததால் அதனை பக்தவச்சலம் குச்சியால் தூக்கி பிடித்த போது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் மணி உட்பட 3 பேர் பக்தவச்சலத்தை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் மணி உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News